பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 60 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி வைணவராகிய அய்யங்கார் தமது அநுட்டானத்தை இங்ங்னம் வெளியிட்டதைச் சிந்திக்கின்றோம். இதனால் இவர் திருமாலடியார்களிடம் பேரன்பு கொண்டவர் என்பதையும் தெளிகின்றோம். இத்திருக்கோயிலின் வழிபாடு காலை 10 மணிக்குத்தான் தொடங்குகின்றது. இந்த நேரத்தைத் தவிர வேறு நேரங்களில் வந்தால் சேவை கிடைக்காது. இத்திருக்கோயிலில் மடைப்பள்ளி இல்லை. இத்திருக்கோயிலிலிருந்து ஒன்றரை கிமீக்குக் கிழக்குத் திசையில் திருமங்கையாழ்வார் அவதரித்த குறையலூர் என்ற சிற்றுர் உள்ளது. இதற்கு எதிர்த்திசையில் முக்கால் கி.மீ. தொலைவில் திருமங்கையாழ்வார் நாடோறும் 1008 அடியார்க்குத் திருவாராதனம் செய்த மங்கை மடம் என்ற சிற்றுர் உள்ளது. இச்செய்திகளை அறிந்த நிலையில் பார்த்தன் பள்ளி என்ற திருத்தலத்தை நோக்கிப் பயணமாகின்றோம்.