பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமிதவம் என்ற நான்கு நிலைகளிலுள்ள எம்பெருமான் காண்டற் கரியனாதலால் அர்ச்சாவதார நிலையில் பார்த்தன் பள்ளியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வழிபடுமாறு தன் நெஞ்சிற்கு ஆற்றுப்படுத்துகின்றார் அய்யங்கார். இந்நிலையில் திருவெண்காடு வந்து பேருந்து மூலம் மயிலாடுதுறை வந்து சேர்கின்றோம்; காளியாக்குடி அய்யர் விடுதியில் ஓய்வு கொள்ளுகின்றோம்.