இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் கருணானந்தம்
679
மதத்துறை தலைவர்களும், மதமே கூடாது என்றுரைக்கும் பெரியாருக்கு. நண்பர்களாக உள்ளனர். தம்மிடம் வருகின்ற அனைவரிடத்தும் மரியாதையுடனும், அன்புடனும் அவர் உரையாடுவார். |
குன்றக்குடி அடிகளாருடன் பெரியார் உரையாடுவது. புத்தபிட்சுகளுடன் பெரியார்! எழுந்து நிற்பதும், வரவேற்பதும், உனரயாடுவதும். |
மிக நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினாலும், அவர் பேச்சை மக்கள் மிகவும் விரும்பிக் கேட்பது வழக்கம். |
கூட்டத்தில் சொற்பொழிவாற்றும் காட்சி. |
அய்யா அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழகத்தில் பெரும் புரட்ரி உண்டாக்கிய குடிஅரசு, பகுத்தறிவு, விடுதலை ஆகிய ஏடுகள் அவரால் துவக்கப்பட்டவை. மலிவான விலையில் ஏராளமான நூல்களைப் பதிப்பித்து, அய்யா தமது கருத்துகளைப் பரப்புவது வழக்கமாகும். |
பெரியார் எழுதுவது பத்திரிகை படிப்பது-புத்தகம் விற்பது-ஆகிய பல காட்சிகள். |
தமது முதிர்ந்த வயதினையும், பல்வேறு உடல்நலக் குறைவுகளையும் பொருட்படுத்தாது, அந்தப் பெருமகன், மக்களின் நல வாழ்வு ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அவரது பிரிவு தமிழ் மக்களால் தாங்கவொண்ணாத இழப்பாகும். |
இறுதி ஊர்வலம் பெரியார்திடலை அடைவது. சடலம் பெட்டிக்குள் அடக்கம் செய்யப்படுவது. |
புத்தரைப் போன்றதொரு அற்புதத் தலைவர் இவரென அறிவார்ந்த பெருமக்கள் வியந்து உரைக்கின்றனர். |
பெரியாரின் அண்மைக்காட்சிகள் சிலவற்றில் அவர் முகம்; பெரியார் பேசுதல். |
தமிழ்நாடு. அரசு அந்தப் பேசறிவாளருக்கு நன்றிக் கடனாற்றியது. அன்னாரின் சடலம் ராஜாஜி மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அரசு |
போலீஸ் பேண்ட்; 36 வெடி; மரியாதை, துப்பாக்கியைத் தலை கீழாகப் பிடித்து. |