பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கடந்தார் உடல் வெளிகாட்டில் உயிர் தமிழ் காட்டில்-கடல் கடந்து வாழும் தமிழர்க்குத் தலைவர் பெரியாரைக் கானத் தணியாத ஆவல்-மலேயா பின்னர் மேற்கு காடுகள், இலங்கை சுற்றுப் பயணங்கள்-தாயகத்தில் சுயமரியாதை що т в т Фі з віт தொடர்ச்சி-அகில உலக அறி முகம்-1929 முதல் 1932 வரை --Info-farmerBot (பேச்சு) SAMMMAMSMMSAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASMSMS மலேயாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்கின்ற தமிழர்கள் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் அங்குக் குடியேறிய வர்கள். ரப்பர் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங் களிலும் உழைத்துப் பிழைத்து வருவோரும், வாணிகம் செய்வோரும், அலுவல் பார்ப்போருமாக இந்திய மர பினைச் சார்ந்தோரில் அதிகமானவர் தமிழர்களே ஆவர். இவர்கள் அங்குள்ள சுதேச மக்கள், சீனர், ஜப்பானியர், ஆங்கிலேயர், முஸ்லிம்கள், ஈழநாட்டவர் ஆகியோருடன் நல்ல முறையில் இணக்கமான சூழ்நிலையில், பின்னிப் பிணைந்து பழகி வந்தவர்கள். எனவே இவர்கள் அனை வருமே இணைந்து ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை மலேயா சிங்கப்பூர் நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். பெரியாரின் வெற்றிக்கு,அவரது ஆதரவாளர்கள் மட்டுமல் லாது,மற்றொரு காரணமாயிருப்பவர் அவரை எதிர்ப்போரே யாவர். அதே முறையில் மலேயாவிலுள்ள யாரோ சில: