பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தை உறுதி செய்வோம்
இங்ஙனம் செய்தால் காற்று
நமக்குத் தோழனாக வருவான்.’

இவ்வாறு காற்றைத் தோழமை கொள்ளும் வழியைப் பாரதி நமக்கு உபதேசிக்கிறான்.

காற்று மழையைக் கொண்டு வருகிறான். தமிழன் நனைகிறான். தங்க நல்ல வீடு இல்லை.

‘நனைவதால் ஜுரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள்.’

நோய் வருவது விதியினால் என்று சொல்லும் சாத்திரங்களைப் பாரதி பாடுகிறான்.

‘உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல் இருப்பன வற்றையும் மறந்துவிட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார்ப் பொய்க் கவிதைகளை மூடரிடம் காட்டி வயிறு வளர்க்கிறார்கள்.’

அசைவனைத்தும் காற்றின் செயல். வையகத்தின் உயிர் காற்று. அதனைப் பாரதி போற்றுகிறான். மீண்டும் வேத ரிஷிகளின் பாணியில் பாரதி காற்றை வணங்குகிறான்.

‘காற்றின் செயல்களை யெல்லாம் பரவுகின்றோம்.
உயிரை வணங்கு கின்றோம்.
உயிர் வாழ்க!’

உயிர் மாயையல்ல. உயிர் உண்மை அதனை வாழ்த்துகிறான் பாரதி, பாரதி கவிதைகளின் ஜீவநாதம் இது. ஷெல்லியில் இது தெளிவாக ஒலிக்கவில்லை.

‘புலவர்களே காலையில் எழுந்தவுடன்
உயிர்களை யெல்லாம் போற்று வோம்.’

இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறான் பாரதி.

113