பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தமிழ்நாடும் மொழியும்


இரண்டாகப் பாகுபாடு செய்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன.

திருந்திய மொழிகள் :- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், கூர்க்.

திருந்தா மொழிகள் :- தோடா, தோண்டு, போடா, தாச்மகல், வராவோன்.

திருந்திய மொழிகளுள் ஒன்றான தமிழ். 'தேனினும் இனியது; தெவிட்டாத் தெள்ளமுதைப் போன்றது; இலக்கியத்தில் உயர்ந்தது; இலக்கணத்திற் சிறந்தது; தனிப்புகழ் படைத்தது; தன்னேரில்லாதது'. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்ததே மலையாளக் குழந்தை என்று கூறினால் அது மிகையாகாது. இக்கருத்தையே அறிஞர் கால்டுவெலும் தமது நூலில் கூறிச் சென்றார். வடமொழிச் சொற்களும் புணர்ச்சிகளும் நிரம்பிய பழந்தமிழே மலையாளம் என்று திரு. எம். சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளார். குஞ்சத்து இராமானுச எழுத்தச்சன் என்பவர் மலையாளத்தைத் தமிழினின்றும் வேறுபடுத்த வடசொல் பலவும் மலையாளத்தில் புகுத்தினார். காலம் கி. பி. 11-வது நூற்றாண்டாகும். கி. பி. 1860-இல் தான் மலையாள இலக்கணம் தோன்றிற்று. எனவே மலையாளம் தமிழைப்போல் தொன்மையானதன்று. தமிழுக்கு அடுத்தபடி சிறப்புமிக்க திராவிடமொழி தெலுங்காகும். ஆனால் இம்மொழி வடமொழி உதவியின்றி தனித்து இயங்கும் ஆற்றல் உடையதன்று. மேலும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகத் தொன்மையான இலக்கியங்கள் தெலுங்கில் இல்லை. தெலுங்கைப் போலவே கன்னடமும் வடமொழியின் துணையை மிகுதியாகப் பெற்று இயங்குகிறது. தமிழில் இருப்பதுபோல் தொன்மையான இலக்கியங்களும் இம்மொழியில் இல்லை. இம்மொழி தெலுங்கிற்குப் பிற்பட்டது. ஆனால் மலையாளத்திற்கு முற்பட்டது.