பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தமிழ்நாடும் மொழியும்


வட மொழியிலே மிகவும் தொன்மையான நூல் இருக்கு வேதமாகும். அஃது இற்றைக்கு ஏறத்தாழ பதியிைரமாண்டுகட்கும் முந்திய பழமையுடையது எனச் சொல்லப்படுகிறது. அந்த நூலிலே மயில், முத்து முதலிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று வடமொழிப் பேரா சிரியர்களே கூறியுள்ளனர். அது மட்டுமல்ல; பாரதம் இராமாயணத்துக்கும் முந்திய நூலாகும். அந்தப் பாரதப் போரிலே தமிழ் மன்னன் பங்கு கொண்டு அப் பாரதப் போர்ப் படைகட்கு உணவு அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும்.

சென்னை உயரற மன்ற நடுவராக இருந்த திரு. சதாசிவ ஐயர் கூறிய கீழ்வரும் கூற்றும் தமிழின் தொன் மைக்குச் சான்ருகும்:-

தமிழ் மொழியில் க, ச, ட, த, ப போன்ற எழுத்துக்கள் ஒவ்வொன்றே இருக்க வடமொழியில் இவற்றிற்கு நன்னன்கு எழுத்துக்கள் உள்ளன; ஒவ்வொன்றுக்கும் மும்மூன்று எழுத்துக்கள் மிகுதியாக உள்ளன. இது வடமொழியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது புலணுகும். இதிலிருந்து வட மொழிக்கும் தமிழ் முந்தியது என்பது புலனுகும். இதுமட்டு மல்ல; எபிரேய மொழியிலாய பைபிளிலே தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. தோகை, இஞ்சி, அரிசி என்பனவே அச் சொற்கள். இவற்ருேடு மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள மலைகள் மிகவும் பழமை வாய்ந்தது எனப் பேராசிரியர் திட்சதர் கூறியிருக்கிருர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை விளங்கும். தெலுங்கு, மலையாளம் போன்ற கிளை மொழிகளின் சொற்கள் பலவற்றுக்கும் வேர்ச்சொற்கள் தமிழிலேதான் காணப்படுகின்றன. வடமொழியாளர் தமிழிடம் பெற்ற சொற்களும் கருத்துக்களும் எண்ணற்றவை.