பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் மொழியும் வடமொழியும்

199


அறிந்தோ அறியாமலோ தமிழ்மொழியைச் சிதைத்து உருமாற்ற ஒரு முயற்சி பேரளவில் மணிப்பிரவாளம் எழுதப்பட்ட காலத்தில் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தன்னேரில்லாத, தனித்து இயங்கவல்ல தமிழ்மொழி ஆரியம் போல் உலகு வழக்கு ஒழியாது, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும், துளுவும் என ஒன்று பல ஆயிடினும், தான் அழியாது, சிதையாது சீரிளமைத் திறனோடு வாழ்கின்றது என்றால் நமது முன்னோரும் நாமும் பிறமொழிச் சொற்களை மிகுதியாகப் புகவிடாமல் செய்ததும், புகுந்த சொற்களை விலக்கியதுமே காரணம். எனவே நாமும் வருங்காலத்தில் விழிப்போடிருந்து பிறமொழிச் சொற்களை மிகுதியாகக் கையாளாது தமிழ்மொழியைப் பேணல் வேண்டும்.