பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தமிழ்நாடும் மொழியும்


இச்சங்கம் திங்கள்தோறும் வெளியிடும் " தமிழ்ப் பொழில் ' என்னும் இதழ் பல அரிய கட்டுரைகளைத் தாங்கி வருகின்றது. தொல்காப்பியம், தெய்வச் சிலையார் உரை முதலிய அரிய நூல்கள் இச்சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இச்சங்க நூல்நிலையம் பல அரிய தமிழ் நூல்களையும், ஆங்கில நூல்களையும், ஆராய்ச்சி நூல்களையும் கொண்டிலங்குவதால் தமிழாராய்ச்சியாளர்க்கு இந்நூலகம் பெரிதும் உதவுகின்றது.

திரு. வே. இராதாகிருட்டின பிள்ளை, அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியார், தமிழ் வள்ளல் பெத்தாச்சிச் செட்டியார், பண்டிதர் சவரிராய பிள்ளை, சிங்காரவேலு முதலியார், பூண்டி அப்பாசாமிவாண்டையார், சங்கப் புலவர் இரா. வேங்கடாசலம் பிள்ளை, இசைவாணர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர் போன்றோர் பலவகை யாலும் இச்சங்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். இச்சங்கத்தால் தொடங்கப்பெற்ற தொடக்கக் கல்லூரி இன்று சிறந்த தொரு புலவர் கல்லூரியாக விளங்குகின்றது. இக்கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒருவரும், இன்று பேசும் படத்துறையில் இயக்குநராகவும், கதை, வசனம் எழுதுபவராகவும் விளங்குபவருமாகிய திரு.ஏ.கே. வேலன் அண்மையில் இக்கல்லூரி வளர்ச்சிக்காக25000 வெண்பொற் காசுகள் கொடுத்தமை போற்றுதற்குரியதாகும்.

பிற சங்கங்கள்

தஞ்சைத் தமிழ்ச்சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை, சைவசித்தாந்த மகாசமாசம், தமிழர் பழங்கலை ஆராய்ச்சிக் கழகம், நெல்லைத் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் போன்றவைகளும் தமிழ் வளர்ச்சிக்காக நிறுவப் பட்ட சங்கங்களாகும். தஞ்சைத் தமிழ்ச்சங்கம் தமிழகம் என்ற சிறந்த திங்கள் வெளியீட்டை நடத்தி, அதன் வாயிலா-