பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தமிழ்நாடும் மொழியும்


விண்ணின் நிறம் என்ன ? அதற்கு அத்தகைய நிறம் வந்தது எப்படி ? விண்ணிலே உள்ள எண்ணற்ற உடுக்களிலே தண்ணுெளி பெற்றன எத்தனை ? கடைெளி பெற்றன எவை? எவை?உடுக்களோடுவிண்ணிலே உலவும் கோள்கள் எவை? அவற்றிற்கும் நாம் வாழும் நில உலகுக்கும் உள்ள தொலைவு எத்தனை மைல் ? நமது உலகம் எதனால் ஆயது? எத்தன்மையது ? அது தோன்றியது எவ்வாறு ? இந் நிலவுலகில் உயிர்கள் எப்போது தோன்றின? முதலில் தோன் றிய உயிர் எது? நிலத்திலே மலையும் காடும் எவ்வாறு தோன்றின? கால நிலை இடத்திற்கு இடம் வேறு பட்டிருப்பதின் காரணம் என்ன ? மக்கள் எவ்வாறு தோன்றினர் ? எவ்வாறு வாழ்கின்றனர்? அவர்கள் உடலின் கூறுகள் யாவை ? அவற்றின் தன்மை என்ன ? அவை வளர்வது எங்ஙனம்? மக்கள் பெருக்கம் எவ்வாறு ஏற்படுகிறது ? அதனால் உலகுக்கு நன்மையா, தீமையா?

மேலே எழுப்பிய அத்தனை வினாக்களும் நூலின் தலைப்புக்கள்: ஒவ்வொரு தலைப்புக்கும் பல நூல்கள் அழகுத் தமிழிலே உடனே எழுத வேண்டும். யாண்டும், எத்துறையிலும் தமிழன்னை நடம் புரிய வேண்டும்.

"உடல் நூலும் உயிர்நூல் அறிவு நூல்
கணித நூல் உள்ள நூலும்
மடனறுநற் பொரு ணூலும் மரநூலும்
நில நூலும் வான நூலும்
தடையிலா மொழி நூலும் இசை நூலும்
சரித நூல் தருக்க நூலும்
அடைவேநம் தமிழ் மொழியில் அழகியநல்
உரை நடையில் அமைக்க வேண்டும்."