பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழ் நாடும் மொழியும்


"ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி
பல்காற் பரவுது மெழுத்தோடு
சொல்கா மருபொருட் டொகை திகழ்பொருட்டே"

என்ற பாடல் இனிது விளக்கும்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் காலம் என்ன? கி. மு.வா? கி. பி. யா? கி. மு. என்பது டாக்டர் மு. வ. போன்ற பல புலவர் கருத்து. கி. பி. என்பது வையாபுரியார் போன்ற சிலர் கருத்து. இதில் எதுகொள்ளத்தக்கது? தள்ளத்தக்கது?

மொழிக்கு முதலில் வராத எழுத்துக்களுள் சகரக்கிளவியும் ஒன்று எனத் தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் சங்க இலக்கியங்களிலோ சகர முதன்மொழிச் சொற்கள் பல வருகின்றன. அவ்வாறு வருகின்ற சொற்களும் தமிழ்ச் சொற்களே ஒழிய அயன்மொழிச் சொற்கள் அல்ல. ஆகவே சங்கத் தொகைநூற்கட்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது போதரும். சங்கத் தொகை நாற்களின் கால எல்லை கி. மு. 300 - கி.பி. 200 என்பதாகும். எனவே தொல்காப்பியர் காலம் கி. மு.வுக்கு முந்தியதாகும். இதுமட்டுமல்ல; சங்கத் தொகை நூற்களிலே மோரியர் படையெடுப்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, மோரியர்கள் வலிவும் பொலிவும் அடைந்த காலம் சந்திரகுப்த மௌரியன் காலமாகும். அவன் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும். ஆக, தொல்காப்பியர் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும்.

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பாயிரத்தொடர். ஐந்திரம் என்பது பாணினீயத்துக்கு