பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

229



பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம்; பெண்டு இருந்த ஊருக்குத் தாலி வேண்டாம்.

பிறந்த ஊருக்குப் புடைவை வேணுமா?

பிறந்தகத்துக்குச் செய்த காரியமும் பிணத்துக்குச் செய்த அலங்காரமும் வீண்.

பிறந்தகத்துப் பெருமையை அக்காளிடம் சொல்வது போல.

பிறந்தகத்துப் பெருமையை உடன் பிறந்தானோடு சொன்னாளாம். 16515

(பிறந்தகத்து வரிசையை.)


பிறந்தகத்துத் துக்கம் கொல்லையிலே.

பிறந்தது எல்லாம் பிள்ளையா?

பிறந்த நாளும் திருவாதிரையும்.

(அடிபடுதல்.)

பிறந்த நாளும் புதன் கிழமையும்.

பிறந்த பிள்ளை பிடி சோற்றுக்கு அழுகிறது; பிறக்கப் போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்கள். 16520


பிறந்த பிறப்போ பெருங் கணக்கு.

பிறந்தவன் இறப்பதே நிஜம்.

(உறுதி.)

பிறந்த வீட்டுச் செல்லி.

பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தானிடம் சொல்லிக் கொண்டாளாம்.

பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும். 16525


பிறந்தால் தம்பி; வளர்ந்தால் பங்காளி.

பிறந்தால் வெள்ளைக்காரனாகப் பிறக்க வேணும்; இல்லா விட்டால் அவன் வீட்டு நாயாய்ப் பிறக்க வேணும்.

பிறந்தும் பிறந்தும் பேதைப் பிறப்பு.

பிறப்பும் சிறப்பும் ஒருவர் பங்கு அல்ல. 16530


பிறப்பு உரிமை வேறு, சிறப்பு உரிமை வேறு.

பிறர் குற்றம் அறியப் பிடரியிலே கண்.

பிறர் பொருளை இச்சிப்பான் தன் பொருளை இழப்பான்.

பிறர் மனைத் துரும்பு கொள்ளான், பிராமணன் தண்டு கொண்டான்,

பிறவாத குழந்தைக்கு நடவாத தொட்டில் இட்டாளாம். 16535

(பிறவாப் பிள்ளைக்கு.)