பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தமிழ்ப் பழமொழிகள்



பிறவிக்குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினாலும் தீராது.

(மாறாது.)

பிறவிக்குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.

பிறவிக்குணம் பொங்கல் இட்டாலும் போகாது.

பிறவிக்குருடன் காது நன்றாகக் கேட்கும்.

பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல. 16540


பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல.

பிறவிக் குருடனுக்குப் பண நோட்டம் தெரியுமா?

பிறவிச் செவிடனுக்குப் பேசத்திறம் உண்டா?

பிறவிச் செல்வம் பின்னுக்குக் கேடு.

பிறை வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல்; தெற்கே சாய்ந்தால் தெற்கெல்லாம் பாழ். 16545


பின் இருக்கிறது புரட்டாசிக் காய்ச்சல்.

பின் இருந்து உண்டு குடைகிறான்.

பின் இன்னா பேதையார் நட்பு.

(பழமொழி நானூறு.)

பின் குடுமி புறங்கால் தட்ட ஓடுகிறான்.

பின்புத்திக்காரன் பிராமணன். 16550


பின்னல் இல்லாத தலை இல்லை; சன்னல் இல்லாத வீடு இல்லை.

பின்னால் இருந்து கூண்டு முடைகிறான்.

பின்னால் வரும் பலாக்காயினும் முன்னால் வரும் களாக்காய் நலம்

பின்னே ஆனால் எறியும்; முன்னால் ஆனால் முட்டும்.

(பின்னே ஆனால் உதைக்கும்.)

பின்னே என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம். 16555


பின்னை என்பதும் பேசாதிருப்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.

பிக்ஷாதிபதி, லக்ஷாதிபதி.

(பக்ஷாதிபதியோ, லக்ஷாதிபதியோ?)