234
தமிழ்ப் பழமொழிகள்
புடைவை கொடுப்பாள் என்று பெண் வீட்டுக்குப் போனால்; கோணிப் பையைக் கட்டிக் கொண்டு குறுக்கே வந்தாளாம்.
புடைவையை வழித்துக்கொண்டு சிரிக்க வேணும்.
புண் எல்லாம் ஆறி விட்டது; தாமரை இலை அகவந்தான் இருக்கிறது என்றானாம்,
புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தால் போல.
புண்ணியத்துக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல. 16615
புண்ணியத்துக்குப் பசுவைக் கொடுத்தால் பல் எத்தனை என்றாளாம்.
புண்ணியத்துக்குப் புடைவை கொடுத்தால் புறக்கடையில் போய் முழம் போட்டாளாம்.
- (புண்ணியம் என்று பழம் புடைவைகொடுத்தால்-)
புண்ணிய பாவத்துக்குப் புடைவை கொடுத்தாளாம்; பின்னாலே போய் முழம் போட்டுப் பார்த்தாளாம்.
புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.
புண்ணியம் ஒருவர் பங்கு அல்ல. 16620
புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.
புண்ணில் எரி இட்டது போல.
புண்ணில் கோல் இட்டது போல.
- (வேல் இட்டது போல.)
புண்ணில் புளிப் பெய்தாற் போல.
புண்ணுக்கோ மருந்துக்கோ வீச்சம். 16625
புண்ணைக் கீறி ஆற்ற வேண்டும்.
புண்பட்ட புலிக்கு இடுப்பு வலி எம்மாத்திரம்?
புத்தி அற்றவர்கள் பக்தியாய்ச் செய்வதும் விபரீதம் ஆம்.
புத்தி அற்றான் பலன் அற்றான்.
புத்தி இல்லா மாந்தர் புல்லினும் புல்லர் ஆவார். 16630
புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.
புத்தி உரம்.
புத்தி உள்ளவர் பொறுப்பார்.
புத்தி உறப் புகழ்.
புத்தி எத்தனை? சுத்தி எத்தனை? 16635