பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

235



புத்தி கட்டை, பெயர் முத்து மாணிக்கம்.

புத்தி கெட்ட புதுப்பாளையம், போக்கிரி பாண்டமங்கலம், மூணும் கெட்ட மோகனூர்.

புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.

புத்திசாலியின் விரோதம் தேவலை; அசட்டின் நட்பு உதவாது.

புத்திமான் பலவான் ஆவான். 16640


புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.

புத்தியோ கட்டை, பெயரோ முத்துமாணிக்கம்.

புத்தூர் சிறுப்பிட்டி பூம்பட்டி ஆவார்.

(யாழ்ப்பாண வழக்கு. இவை சிறு குன்று உள்ள இடங்கள்.)

புத்தூரான் பார்த்திருக்க உண்பான்; பசித்தோர் முகம் பாரான்; கோத்திரத்துக்குள்ள குணம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

புத்ராத் சதகுணம் புத்ரீ. 16645


புதன் கோடி தினம் கோடி.

(தினமும் கிடைக்குமாம்.)

புதன் சனி முழுகு.

புதிது புதிதாய்ப் பண்ணையம் வைத்தால் மசிரு மசிரா விளைஞ்சதாம்.

புதிசுக்கு வண்ணான் கோணியும் வெளுப்பான்,

புதிதாய்ப் புதிதாய்க் குலம் புகுந்தேன், பீலாப் பூத்தகச் சோறு. 16650


புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய்க் கட்டி வீசுகிறான்.

புதிதாய் வந்த மணியக்காரன் நெருப்பாய் இருக்கிறான்.

(நெருப்பாய் வாரி இறைக்கிறான்.)

புதிய காரியங்களில் புதிய யோசனை வேண்டும்.

புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும்.

(புதிய விளக்குமாறு.)

புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான். 16655


புதிய வண்ணானையும் பழைய அம்பட்டனையும் தேடவேண்டும்.

புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்று.

புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?

புதுக் குடத்தில் வார்த்த தண்ணீரைப் போல.

புதுக்கோட்டை அம்மன் காசு பெற மாட்டான். 16660