தமிழ்ப் பழமொழிகள்
241
புழுக்கைக்குணம் போகாது ஒரு காலும்.
புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே. 16785
புழுக்கைக்குப் பொன்முடி பொறுக்குமா?
புழுக்கை கலம் கழுவித் தின்னாது.
- (உண்ணாது, உண்ணுமா?)
புழுக்கைக்கு மேல் சன்னதம் வந்தால் பூ இட்டுக் கும்பிட வேண்டும்.
புழுக்கை சுகம் அறியுமா?
புழுக்கை வெட்கம் அறியுமா? 16790
புழுங்கிப் புழுங்கி மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.
புழுத்த சரக்கு; கொழுத்த பணம்,
- (புழுத்தகன்).
புழுத்த நாய் குறுக்கே போகாது.
புழுதி உண்டானால் பழுது இல்லை.
புழுவும் புரளும். 16795
புழைக்கடைக் கீரை மருந்துக்கு உதவாது
- (பச்சிலை.)
புழைக்கடை மருந்து சுவைக்கு உதவாது.
- (கவைக்கு.)
புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?
புள்ளிக் கணக்குப் பள்ளிக்கு உதவாது.
புள்ளிக்காரன் கணக்குப் பள்ளிக்கு உதவாது. 16800
- (புள்ளிக் கணக்கு.)
புள்ளிப் பொறி பாய்ந்த மூங்கில் கொள்ளிச் சாம்பல் ஆனாற்போல.
புள்ளும் புறாவும் இரை தின்னா.
- (அநீதி அடைந்தால்.)
புளி ஆயிரம், போந்து ஆயிரம்.
- (பொந்து)
புளி எத்தனை தூக்கு? ஒரே தூக்கு.
புளி ஏப்பக்காரனும் பசி ஏப்பக்காரனும். 16805
புளித்த காய்க்குப் புளி யுகுத்துவாயோ?
- (புகுத்தினாயோ?)
புளியங்காய்க்குப் புளிப்புப் புகுத விட்டால் வருமா?
புளியங் கொட்டைக்குச் சனி மூலையா?
புளியங் கொம்பைப் பிடிக்கப் போகிறது புத்தி.
புளியந் தோடும் பழமும் போல. 16810
- (ஓடும்.)