பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

241



புழுக்கைக்குணம் போகாது ஒரு காலும்.

புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே. 16785


புழுக்கைக்குப் பொன்முடி பொறுக்குமா?

புழுக்கை கலம் கழுவித் தின்னாது.

(உண்ணாது, உண்ணுமா?)

புழுக்கைக்கு மேல் சன்னதம் வந்தால் பூ இட்டுக் கும்பிட வேண்டும்.

புழுக்கை சுகம் அறியுமா?

புழுக்கை வெட்கம் அறியுமா? 16790


புழுங்கிப் புழுங்கி மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.

புழுத்த சரக்கு; கொழுத்த பணம்,

(புழுத்தகன்).

புழுத்த நாய் குறுக்கே போகாது.

புழுதி உண்டானால் பழுது இல்லை.

புழுவும் புரளும். 16795


புழைக்கடைக் கீரை மருந்துக்கு உதவாது

(பச்சிலை.)

புழைக்கடை மருந்து சுவைக்கு உதவாது.

(கவைக்கு.)

புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?

புள்ளிக் கணக்குப் பள்ளிக்கு உதவாது.

புள்ளிக்காரன் கணக்குப் பள்ளிக்கு உதவாது. 16800

(புள்ளிக் கணக்கு.)


புள்ளிப் பொறி பாய்ந்த மூங்கில் கொள்ளிச் சாம்பல் ஆனாற்போல.

புள்ளும் புறாவும் இரை தின்னா.

(அநீதி அடைந்தால்.)

புளி ஆயிரம், போந்து ஆயிரம்.

(பொந்து)

புளி எத்தனை தூக்கு? ஒரே தூக்கு.

புளி ஏப்பக்காரனும் பசி ஏப்பக்காரனும். 16805


புளித்த காய்க்குப் புளி யுகுத்துவாயோ?

(புகுத்தினாயோ?)

புளியங்காய்க்குப் புளிப்புப் புகுத விட்டால் வருமா?

புளியங் கொட்டைக்குச் சனி மூலையா?

புளியங் கொம்பைப் பிடிக்கப் போகிறது புத்தி.

புளியந் தோடும் பழமும் போல. 16810

(ஓடும்.)