பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

243


பூ


பூ இல்லாக் கொண்டை புலம்பித் தவிக்கிறதோ?

பூ இல்லாமல் மாலை கோத்துப் புருஷன் இல்லாமல் பின்ளை பெறுகிறது போல.

(யாழ்ப்பாண வழக்கு.)

பூ உதிரப் பிஞ்சு உதிரக் காய் உதிரக் கனி உதிர.

பூ உள்ள மங்கையாம், பொற்கொடியாம், போன இடம் எல்லாம் செருப்படியாம். 16840


பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?

பூச்சாண்டி காட்டுதல்.

பூச்சி காட்டப் போய்த் தான் பயந்தாற் போல.

பூச்சி காட்டப் போய்ப் பேய் பிடித்த கதை.

பூச்சி பூச்சி என்றால் புழுக்கை தலைமேல் ஏறும். 16845


பூச்சி பூச்சி என்றாளாம் பூலோகத்திலே; அவளே போய் மாட்டிக் கொண்டாளாம் சாலகத்திலே.

பூச்சி பூச்சி என்னும் கிளி பூனை வந்தால் சீச்சுக் கீச்சு என்னுமாம்.

பூச்சி மரிக்கிறது இல்லை; புழுவும் சாகிறதில்லை.

பூச்சூட்ட அத்தை இல்லை; போரிட அத்தை உண்டு.

பூசணிக்காய் அத்தனை முத்தைக் காதில் ஏற்றுகிறதா? மூக்கில் ஏற்றுகிறதா? 16850

(முத்தை எங்கே இட்டுக் கொள்கிறது?)


பூசணிக்காய் அத்தனை முத்தைப் போட்டுக் கொள்கிறது எங்கே?

பூசணிக்காய் அத்தனையும் சதை.

பூசணிக்காய் அழுகினது போல.

பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.

(தூக்கினவனை.)

பூசணிக்காய்க்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறாய். 16855


பூசணிக்காய் களவாடினவன் தோளைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட கதைபோல.