பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தமிழ்ப் பழமொழிகள்



பூ விற்ற கடையிலே புல் விற்கவும், புலி இருந்த காட்டிலே பூனை இருக்கவும், சிங்கம் இருந்த குகையிலே நரி இருக்கவும், ஆனை ஏறினவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே.

பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா? 16910


பூ விற்றவளைப் பொன் விற்கப் பண்ணுவேன்.

பூவுக்கும் உண்டு புது மணம்.

பூவும் மணமும் போல.

பூவைத்த மங்கையாம், பொற் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்.

பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெற்றது போல. 16915


பூனியல் தன் வாயால் கெட்டது போல.

(பூனியல்; ஒரு பறவை.)

பூனை இளைத்தால் எலி சுலவிக் களிக்கும்மாம்.

பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேத்தி எடுக்கிறது.

பூனை எச்சில் புலவனுக்குக் கூட ஆகாது; நாய் எச்சில் நாயகனுக்கு ஆகும்.

(புலையனுக்குக் கூட.)

பூனைக்கு இல்லை தானமும் தவமும். 16920


பூனைக்கு ஒரு சூடு போடுவது போலப் புலிக்கும் ஒரு சூடு போடு.

பூனைக்கு ஒன்பது இடத்திலே உயிர்.

பூனைக்குக் கும்மாளம் வந்தால் பீற்றல் பாயைச் சுரண்டுமாம்.

பூனைக் குட்டிக்குச் சிம்மாளம்; ஓலைப் பாய்க்குக் கேடு.

பூனைச்குக் கொண்டாட்டம்; எலிக்குத் திண்டாட்டம். 16925


பூனைக்குச் சிங்கம் பின் வாங்குமா?

பூனைக்குச் சிம்மாளம் வந்தால் பீற்றல் பாயில் புரளுமாம்.

பூனைக்குத் தன் குட்டி பொன் குட்டி.

பூனைக்குப் பயந்தவன் ஆனையை எதிர்த்துப் போனானாம்.

பூனைக்குப் பயந்திருப்பாள்; புலிக்குத் துணிந்திருப்பாள். 16930


பூனைக்கு மருந்து வாங்க ஆனையை விற்பதா?

பூனைக்கு மீன் இருக்கப் புளியங்காயைத் தின்றதாம்.

(தின்னுமா?)

பூனைக்கு யார் மணி கட்டுவது?

பூனை கட்டும் தோழத்தில் ஆனை கட்டலாமா?

(தொழுவத்தில்.)

பூனை கண்ணை மூடினால் உலகமே அஸ்தமித்து விடுமா? 16935