தமிழ்ப் பழமொழிகள்
247
பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம்.
பூனை குட்டி போட்டாற்போல் தூக்கிக் கொண்டு அலைகிறான்.
பூனை குட்டியைத் தூக்கிக் கொண்டு போவது போல,
பூனை குண்டு சட்டியில் தலையை விட்டுக் கொண்டு பூலோகம் எல்லாம் இருண்டு போச்சென்று நினைக்குமாம்.
- (இட்டுக் கொண்டு.)
பூனைக் குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா? 16940
பூனை கொன்ற பாவம் உன்னோடே; வெல்லம் தின்ற பாவம் என்னோடே.
பூனை சிரித்ததாம்; எலி பெண்டுக்கு அழைத்ததாம்.
பூனை செய்கிறது துடுக்கு; அதை அடித்தால் பாவம்.
பூனை நோஞ்சல் ஆனாலும் சகுனத்தடையில் குறைவு இல்லை.
பூனை பால் குடிக்கிறது போல. 16945
பூனை பிராமண போஜனம் பண்ணுகிறது என்று பூணூல் போட்டுக் கொண்டதாம் எலி.
பூனை பிராமண போசனம் பண்ணுகிறேன் என்று பூணூல் போட்டுக் கொண்டதாம்.
பூனை புறக்கடை, நாய் நடு வீடு.
பூனை போல் அடங்கினான்; புலிபோல் பாய்ந்தான்.
- (ஒடுங்கினான்.)
பூனை போல் இருந்து புலி போல் பாயும், 16950
- (பூனை போல் நடுங்கி,)
பூனை போல் ஒடுங்கி ஆனை போல் ஆக்கிரமிக்கிறது.
பூனை போல நடுங்கிப் புலி போலப் பாய்வான்.
பூனை போன்ற புருஷனுக்கு வாழ்க்கைப் பட்ட சுண்டெலிப் பெண் போல்.
பூனை மயிர் ஆனாலும் பிடுங்கினது மிச்சம்.
பூனைமுன் கிளிபோல் புலம்பித் தவிக்கிறது. 16955
பூனையின் அதிர்ஷ்டம், உறி அறுந்து விழுந்தது.
பூனையும் எலியும் போல்.
பூனையைக் கண்ட கிளிபோல.
பூனையைக் கண்டு புலி அஞ்சுமா?
பூனையைக் கொன்ற பாவம் உனக்கு; பிடி வெல்லம் தின்ற பலன் எனக்கு. 16960