இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
248
தமிழ்ப் பழமொழிகள்
பூனையைத் தான் வீட்டுப் புலி என்றும் எலியரசன் என்றும் சொல்வார்கள்.
பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல்,
பூனையை வளர்த்தால் பொல்லாத வழி; நாயை வளர்த்தால் நல்ல வழி.
பூனை வயிற்றில் ஆனை பிறந்தது போல.
பூனை வாய் எலிபோல் புலம்பித் தவிக்கிறது. 16965
பூனை வாயில் அகப்பட்டி எலி போல்.
பூனை விற்ற காசுக்கு ஆனை வாங்க இயலுமா?