பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தமிழ்ப் பழமொழிகள்


பூனையைத் தான் வீட்டுப் புலி என்றும் எலியரசன் என்றும் சொல்வார்கள்.

பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல்,

பூனையை வளர்த்தால் பொல்லாத வழி; நாயை வளர்த்தால் நல்ல வழி.

பூனை வயிற்றில் ஆனை பிறந்தது போல.

பூனை வாய் எலிபோல் புலம்பித் தவிக்கிறது. 16965


பூனை வாயில் அகப்பட்டி எலி போல்.

பூனை விற்ற காசுக்கு ஆனை வாங்க இயலுமா?