பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/109

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

105



என்னும் சொல்லுக்கு, உபகாரம், ஈகை என்னும் இரண்டு பொருளாம். இவ்வாறு அங்கதம், வேளாண்மை என்னும் சொற்களைப் பாடலின் முதலில் ஆதியில்) நிறுத்திப் பின்னர்ப் பொருள் கூறுவதால் இந்தப் பிரிவுக்கு ஆதியிற் பொருள் என்று பெயர் சூட்டப்பட்டது. இனி, ‘அந்தத்துப் பொருள்’ என்றால் என்ன என்று விளக்குவதற்கு அந்தத்துப் பொருள் பிரிவிலுள்ள முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் எடுத்துக் கொள்வோம்:— .

[அணங்கு என்னும் பெயர்]

“தெய்வமும் தெய்வத் துவமை மாதரும்
மையலும் நோயும் வருத்தமும் கொலையும்
ஐயமின் றுரைக்கும் அணங்கு என்கிளவி.”

இது முதல் நூற்பா.

[வையம் என்னும் பெயர்]

“சிவிகையும் ஆனேறும் சகடமும் தேரும்
அவனியும் வையம் எனப்பெய ராகும்.”

இஃது இறுதி நூற்பா.

அணங்கு என்னும் சொல்லுக்கு, தெய்வம், தெய்வத்துவமை மாதர் (பெண் தெய்வம் போன்ற பெண்), மையல், நோய், வருத்தம், கொலை என்னும் ஆறு பொருளாம். வையம் என்னும் சொல்லுக்கு, சிவிகை (பல்லக்கு), ஆனேறு (காளை), சகடம், தேர், அவனி (உலகம்) என்னும் ஐந்து பொருளாம். இவ்வாறு அணங்கு, வையம் என்னும் சொற்களைப் பாடலின் அந்தத்தில் (இறுதியில்) வைத்து முன்னாலேயே பொருள் கூறியிருப்பதால்,