பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/111

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

107



1. தெய்வப் பெயர்த் தொகுதி

தெய்வப் பெயர்த் தொகுதியில், சிவன், திருமால், முருகன், அருகன், புத்தன் முதலிய பல்வகைத் தெய்வங்களின் பெயர்களைக் கூறுவதோடு ஆசிரியர் அமைந்துவிடவில்லை; மேலும் பலவகைத் தேவ இனங்கள், அரக்க இனம், நாள் (நட்சத்திரங்கள்), கோள் (கிரகங்கள்), விண், காற்று, தீ, நீர், பலவகைக் காலங்கள், மழை மேகம் இடி முதலியவற்றிற்குரிய பலவகையான பெயர்களையும் கூறியுள்ளார். மாதிரிக்காக முதல் பாட்டைப் பார்ப்போம். அதில் சிவனுக்குரிய அறுபத்துமூன்று பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அது வருமாறு :—

(சிவன் பெயர்)

“சங்கரன், இறையோன், காம தகனன்,
கங்கா தரனே, கறைமிடற் றண்ணல்,
கூற்றை உதைத்தோன், குன்ற வில்லீ,
ஏற்று வாகனன், திரியம்பகன், சோதி,
நக்கன், சடையோன், நாரி பாகன்,
முக்கண் பகவன், பசுபதி, பரமன்,
கொன்றை சூடி, கொலை மழுவாளி,
ஈமத் தாடி, பிஞ்ஞகன், பித்தன்,
ஆனை யுரித்தோன், அரன், சிவன், உருத்திரன்,
கால காலன், கபால மூர்த்தி,
நீல கண்டன், நீறணி கடவுள்,
அரவா பரணன், ஆரழ லாடி,
பிறையது சூடி, பெருமான், உமாபதி,
அழலது வேத்தி, அமலன், ஆனந்தன்,
பரசு பாணி, சுடலை யாடி,
மானிடம் ஏந்தி, மறைமுதல், யோகி,
புலித்தோ லுடையோன், புரமூன் றெரித்தோன்,

7