பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/117

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

113



கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு வீடு (இராசி) களிலும் ஞாயிறு (சூரியன்) தங்குவதுதான் முறையே சித்திரை முதலிய பன்னிரண்டு திங்கள்கள் (மாதங்கள்) ஆகும். ஞாயிறு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு திங்கள் காலம் இருப்பான். எனவே, பன்னிரண்டு வீடுகட்கும் பன்னிரண்டு திங்கள்கள் ஆகும். இன்னுங் கேட்டால், தமிழர்கள் சித்திரை, வைகாசி.....மாசி, பங்குனி எனப் பன்னிரு திங்கள்களையும் பெயர் சொல்லி அழைப்பதுபோல, மலையாளிகள் மேடம், இடபம்......கும்பம், மீனம் எனவே பன்னிரு திங்கள்களையும் பெயர் சொல்லி அழைக்கின்றனர். இம்முறைப்படி நோக்கின், ஞாயிறு மேடம் என்னும் வீட்டில் இருப்பது, சித்திரைத் திங்கள் என்பதும், சிம்மம் என்னும் வீட்டில் இருப்பது ஆவணித் திங்கள் என்பதும் புலனாகும். பன்னிரு வீடுகளுள் சிம்மம் என்னும் வீடு ஞாயிற்றின் ஆட்சிக்குரிய சொந்த வீடு என்பதும், இரவல் வீடுகளாகிய மற்ற பதினொரு வீடுகளுள் மேடம் என்னும் வீட்டில் வந்திருக்கும்போது ஞாயிறு ‘உச்சம்’ (உயர் வன்மை) பெற்று விடுகிறான் என்பதும் கணிப் புக்கலையின் (சோதிடக் கலையின்) முடிபு. எனவே, ஞாயிறு ‘உச்சம்’ பெற்றிருக்கும் மேட வீட்டுத் திங்களாகிய சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டது போலவே, ஞாயிறு ‘ஆட்சி’ பெற்றிருக்கும் சொந்த வீடாகிய சிம்மம் என்னும் ஆவணித் திங்களை அந்தக் காலத்தார் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டதில் தவறொன்றும் இல்லை. மற்றும், சிம்ம வீட்டுத் தொடர்புடைய மகம் என்னும் விண்மீன் ஞாயிற்றுக்கு மிகவும் உகந்ததாம். இவ்வாராய்ச்சியின்படி மேலும் சொல்லப் போனால், சித்திரையினும் ஆவணியை