பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/119

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

115



“ஆவணி முதலா இரண்டிரண் டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே.”

என்னும் திவாகரப் பாடலில் ஆளப்பட்டுள்ளது. “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று சங்க இலக்கியமாகிய குறுந்தொகையிலும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. எனவே நிகண்டுகளிலுள்ள தமிழ்ச் சொற்களைத் துருவி எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

தெய்வப் பெயர்த் தொகுதியில், நாள், கோள், விண், காற்று, தீ, நீர், காலங்கள், மழை மின்னல் இடி முதலியவற்றையும் கூறியிருப்பதிலிருந்து இவையும் தெய்வச் சார்புடையவை என்று பழங்கால மக்கள் நம்பி வழிபட்டனர் என்பது புலனாகும்.