பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/124

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120



எழுத்தாளரும் பேச்சாளரும் ஒரேபெயரையே திரும்பத்திரும்பப் பயன்படுத்தாமல், பல்வகைப் பெயர்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். அதனால் படிப்பவர்கட்கும் சுவை மிகும். இஃது ஒரு பெரிய நன்மையல்லவா?

ஈண்டு, சேரரைப் பற்றிய பகுதி ஆராய்ச்சிக்குரியதாகும். பண்டைக்காலத்தில் தமிழ்நாடு, சேரநாடு–சோழநாடு-பாண்டிய நாடு-தொண்டை நாடு என்றெல்லாம் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை யாவரும் அறிவர். அப்பிரிவுகளுள் சேரநாடு எனப்படும் பகுதி இப்போது ஏங்கே? அதுதான் ‘கேரளா’ எனப்படும் மலையாள நாடாகும். தொடர்புடைய சிலர் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாவிடினும் இது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போது கேர்ளா எனப்படும் மலையாள நாட்டில் பேசப்படும் மலையாள மொழிக்குக் கேரளம் என்ற பெயரும் உண்டு. இதற்குப் பெரிய ஆராய்ச்சிகூட வேண்டியதில்லை. ஒரு சிறிது உற்றுக்கேட்டாலே போதும்—தமிழ்மொழியும் கேரள மொழியும் ஒன்றே என்பது எளிதில் புரியும். இதற்குச் சான்றாக இரண்டு வாக்கியங்கள் வருமாறு:-

(1) “இது ஒரு பருத்திச்செடியுட படம். இதனுட பூவும் காயும் நோக்குக”. (பருத்திச்செடி என்னும் பாடத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

(2) “செந்நாயி ஆட்டின் குட்டியெ சாடி கொன்னு தின்னு”. (ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்னும் பாடத்தின் இறுதி வாக்கியம் இது.)

மேலுள்ள வாக்கியங்கள் இரண்டும் தமிழ்ப்பாடப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையல்ல; மலையாள