பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/125

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

121



மொழிப் பாடப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இப்போது தெரிந்து கொள்ளலாமே, தமிழும் மலையாளமும் ஒன்றே என்பதை! ஆனால் ‘செந்நாய்’ என்னும் தமிழ்ச்சொல் ‘செந்நாயி’ எனவும், ‘குட்டியை’ என்னும் தமிழ்ச்சொல் ‘குட்டியெ’ எனவும், ‘கொன்று தின்றது’ என்னும் தமிழ்ச்சொல் ‘கொன்னு தின்னு’ எனவும் கொச்சை உருவத்தில் மலையாள மொழியாகக் காட்சியளிக்கிறது. எனவே, பேச்சு இலத்தின் மொழிதான் பிரெஞ்சுமொழி என்று ஒரு கருத்து நிலவுவது போல, பேச்சுத் தமிழ்தான் மலையாளம் என்று ஒருவாறு கூறலாம். ஆகவே, தமிழ்நாட்டின் ஒரு பிரிவாக இருந்த சேரநாடுதான் இப்போது தனித்து இயங்கும் கேரளாவாகும்—என்று துணிந்து கூறலாம். இதற்குச் சான்று வேண்டுமா? சேரமன்னனின் பெயர்களைக் கூறும் திவாகரப் பாடலில் ‘கேரளன்’ என்று ஒரு பெயர் காணப்படுகிறதே—அஃது ஒன்றே போதாதா?

பாண்டியனைக் குறிக்கும் பெயர்ப் பட்டியலில் ‘தமிழ்நாடன்’ என்னும் ஒரு பெயர் காணப்படுகிறது. கழகம் வைத்துத் தமிழ் வளர்த்த சிறப்புரிமையால் பாண்டியன் தமிழ்நாடன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான் போலும்.

இனி அரசரை விடுத்து மற்றையோரிடம் செல்வோம்:

வள்ளுவர் என்னும் சொல் இழிந்த குலத்தாரைக் குறிக்கும் என்னும் கொள்கையில் திருவள்ளுவரையே இழிகுலத்தவராகக் கொண்டவர்களும் உண்டு. ஆனால் வள்ளுவர் என்பவர் அரசரின் உள்ளுக்குள்ளான—