பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/127

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

123


யினர்தானோ!) கைம்பெண் (விதவை) வயிற்றில் பிறந்த பிள்ளைக்குக் ‘கோளகன்’ என்று பெயராம். திருமணமாகாத கன்னி பெற்ற பிள்ளைக்குக் ‘கானினன்’ என்று பெயராம். இவற்றை,

“கொண்டோன் பிழைத்துப் பெறும்புதல்வன் குண்டகன்.”

“கோளில் கைம்மையில் பெறும் புதல்வன் கோளகன்.”

“கன்னியிற் பெறும் புதல்வன் கானினன் ஆகும்.”

என்னும் நூற்பாக்களால் அறியலாம். அன்றியும், பொதுவாக ஆணையும் பெண்ணையும் குறிக்கும் பெயர்களும் அறியத்தக்கனவாம் :

(ஆண் பெயர்)

“ஆடவர், மைந்தர், காளை, குமாரர்,
ஆடுஉ, மாந்தர், மகன், புமான், மணாளன்,
கூடிய ஆண் பெயர் ஆகக் கூறுவர்.”

(பெண் பெயர்)

“பேதை, அங்கனை, வனிதை, இளம்பிடி,
மாது, மடவாள், மகடூஉ, மங்கை,
மடந்தை, காரிகை, மானினி, மஞ்சனி,
மாயோள், ஆட்டி, பாவை, தெரிவை,
தையல், அரிவை, பெதும்பை, பிணா, மகள்,
நையு நுண்ணிடை நாரி என்றாங்கு
இருபதும் இரண்டும் பெண்பாற்கு எய்தும்.”

மேலே ஆணுக்கும் பெண்ணுக்கும் இத்தனை பெயர்கள் கூறியிருப்பதுகூட வியப்பன்று; ஆணின் மயிருக்கும் பெண்ணின் மயிருக்கும் வெவ்வேறு பெயர்கள் கூறியிருப்பதுதான் வியப்பு!

8