பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/129

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

125



3. விலங்கின் பெயர்த் தொகுதி

புதிதாகச் சென்னைப்பட்டணம் செல்பவர்கள் ‘உயிர் காலேஜ்’, ‘செத்த காலேஜ்’ என்னும் இரண்டு இடங்களையும் மற்றும் பல இடங்களையும் பார்த்துவிட்டு வருவது வழக்கம். உயிர்காலேஜ், செத்த காலேஜ் என்பன பொருட்காட்சி நிலையங்களாகும். செத்த காலேஜ் என்னும் நிலையத்தில், செத்துப் போன உயிர்களின் உடலங்கள், கருங்கற் சிலைகள் முதலிய உயிரில்லாத பொருள்கள் இருக்கும். உயிர் காலேஜ் என்னும் இடத்தில், பல வகையான விலங்குகள், பறவைகள், நீர் வாழும் உயிர்கள் முதலிய உயிர்ப் பொருள்கள் இருக்கும். இது மிகவும் சிறிய நிலையம். ஆனால், திவாகர நிகண்டின் மூன்றாம் தொகுதியாகிய ‘விலங்கின் பெயர்த்தொகுதி’ என்னும் பகுதியோ, சென்னை உயிர்க் காட்சி நிலையத்தைவிடப் பற்பல மடங்கு பெரியதாகும்.

(1) மரஞ்செடி கொடி (தாவரம்), (2) நீர் வாழ்வன, (3) ஊர்வன, (4) பறவை, (5) விலங்கு, (6) மக்கள், (7) தேவர் என எழுவகை இனத்துப் பிறவிகளாக உயிர்களைப் பிரிப்பது ஒருசார் மரபு. இந்த ஏழனுள், தேவர் தெய்வப் பெயர்த் தொகுதியிலும், மக்கள் மக்கட் பெயர்த் தொகுதியிலும் சொல்லப்பட்டுள்ளனர். மரஞ்செடி கொடி என்னும் நிலையியல் (தாவரப்) பொருள் நான்காவது தொகுதியாகிய மரப்பெயர்த் தொகுதியில் சொல்லப்பட்டுள்ளது—(அதனை அடுத்தாற்போல் காணலாம்.) இந்தத் தேவர், மக்கள்,