பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/130

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

126



மரஞ்செடிகொடி என்னும் மூன்றும் போக, மற்றைய விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன என்னும் நான்கு உயிர்ப்பொருள்களும் மூன்றாம் தொகுதியாகிய இந்த விலங்கின் பெயர்த்தொகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதியில் பலவகை விலங்குகள், பல வகைப் பறவைகள், பறப்பன என்ற முறையில் ஈ, கொசு, வண்டு, வௌவால் முதலியவைகள், பாம்பு, பல்லி, தேள், எறும்பு, கறையான், சிலந்தி, புழு முதலிய ஊர்ந்து செல்லும் உயிர்கள், மீன்வகைகள், சிப்பி, சங்கு, நண்டு, தவளை, அட்டை, ஆமை, முதலை, திமிங்கிலம் முதலிய நீர்வாழ் உயிர்கள், விலங்கு—பறவை முதலியவற்றின் உறுப்புக்கள் ஆகியவற்றிற்கு உரிய பெயர்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், மாதிரிக்காக விலங்கைப் பற்றிச் சிறிது சிறப்பாகக் காண்பாம் :

சிங்கம், புலி, யானை, குதிரை, மாடு, ஆடு, மான், முதலிய பலவகை விலங்குகளின் பெயர்களும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு விலங்குக்கும் எத்தனையோ பெயர்கள் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, யானைக்கு முப்பத்தெட்டுப் பெயர்களும் குதிரைக்கு முப்பது பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இப் பொதுப்பெயர்களோடு நின்றுவிடவில்லை. யானையென்றால், ஆண் யானைக்கு, வெவ்வேறு பெயர்களும், பெண் யானைக்கு வெவ்வேறு பெயர்களும், குட்டி யானைக்கு வெவ்வேறு பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை,

[ஆண்]

“மதகரி, தந்தி, வன்களிறு யானை.”