பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/131

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

127



[பெண்]

“கரேணு, பிடி, பெண் யானைப் பெயரே.”

[கன்று]

“போதகம், துடியடி, கயம், முனி, கன்று ஆம்.”

என்னும் நூற்பாக்களால் அறியலாம். அடுத்து, குதிரையின் பெயர்களுள், பாண்டியர் குதிரைக்குக் ‘கனவட்டம்’ என்றும், சேரர் குதிரைக்குப் ‘பாடலம்’ என்றும், சோழர் குதிரைக்குக் ‘கோரம்’ என்றும், மற்ற சிறு குறுநில மன்னர்களுடைய குதிரைக்குக் ‘கந்துகம்’ என்றும் பெயராம். இவற்றை,

“கனவட்டம் என்பது வழுதி ஊர்மா,
பாடலம் என்பது சேரன் ஊர்மா,
கோரம் என்பது சோழன் ஊர்மா,
கந்துகம் குறுநில மன்னர் ஊர்மா.”

என்னும் பாடல் பகுதி உணர்த்தும். இந்தப் பெயர்ப் பிரிவினை சுவையாயுளதல்லவா!

மற்றும், மாடு, ஆடு, மான், பன்றி முதலிய விலங்குகளுக்கேகூட பல பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காக மாட்டை எடுத்துக்கொள்வோம்.

மாடு தொடர்பாக உள்ள ஓர் உண்மை சிலருக்குப் புரியாமல் குழப்பமாயிருக்கிறது. சிலர் அதில் கருத்துச் செலுத்தியேயிருக்கமாட்டார்கள். அது வருமாறு:—மாட்டில் எருமை என ஒரு பிரிவு உண்டு. அதில் ஆணும் உண்டு—பெண்ணும் உண்டு. ஆண்