பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/133

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

129



[ஆண் பசுவின் பெயர்]

“பாறல், புல்லம், பாண்டில், பசு, மூரி,
ஏறு, பூணி, இருலே, பெற்றம்,
எருது, சே, விடை, இடபம் என்றிவை
கருதின் போத்தின் பெயரெனக் கருதுவர்.”

என்னும் பாடல்கள் சான்று பகரும். இவற்றுள் முதல் பாடலின் இறுதியில் உள்ள ‘பசுச்சாதிப் பொதுப்பெயர்’ என்னும் சிறு தொடரே போதுமே!

மற்றும் இப்பகுதியில், இன்னின்ன விலங்குகளின் ஆண்களையும் பெண்களையும் இன்னின்ன பொதுப்பெயர்களாலும், குட்டிகளை இன்னின்ன பொதுப்பெயர்களாலும் அழைக்கவேண்டும் என்னும் மரபுநிலை மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக, மீன்கள் தொடர்பான ஒரு சுவையான செய்தியைப் பார்ப்போம். ‘மெலியவரை வலியவர் வாட்டினால் வலியவரைத் தெய்வம் வாட்டும்’ என்னும் கருத்தை விளக்கும் முறையில், ‘சிறுமீனைப் பெருமீன் விழுங்கினால் பெருமீனைத் திமிங்கிலம் விழுங்கும்’ என்று உலகில் மக்கள் கூறுவது வழக்கம். ஆம், உண்மைதான்! சிறுமீனை விழுங்கும் அந்தப் பெருமீனுக்கு ‘யானை மீன்’ என்று பெயராம். யானை மீனை விழுங்கும் மீனுக்குத் ‘திமிங்கிலம்’ என்று பெயராம். திமிங்கிலத்தை விழுங்கும் மீனுக்குத் ‘திமிங்கில கிலம்’ என்று பெயராம். இந்த விவரங்களை,

[பெருமீனின் பெயர்]

“யானைமீன், திமி, பெருமீன் ஆகும்.”

[யானைமீனை விழுங்கும் மீன்]

“யானையை விழுங்குமீன் திமிங்கிலம் என்ப.”