பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/134

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

130



[திமிங்கிலத்தை விழுங்கும் மீன்]

“அம் மீனை விழுங்கு மீன் திமிங்கிலகிலமே.”

என்னும் நூற்பாக்கள் உணர்த்தும். பிறரை ஏய்த்துப் பிழைப்பவனைத் ‘திமிங்கிலம்’ என்று சுட்டித் திட்டுவது உலக வழக்கம். இன்னும் பெரிய அளவில் ஊரை அடித்து உலையில் போடுபவனைத் ‘திமிங்கில கிலம்’ என்று சொல்ல வேண்டும் எனத் திவாகரம் நமக்குக் கற்றுத் தருவதுபோல் இல்லையா! ஆனால் மக்கள் இந்தத் திமிங்கிலகிலத்தைக்கூடப் பேச்சு வழக்கில் குறிப்பிடுவதுபோல் தெரிகிறது. ‘ஐயோ அவனா—அவன் பெரிய திமிங்கிலமாயிற்றே!’ என்று கூறுகின்றார்களே—இங்கே பெரிய திமிங்கிலம் என்பது திமிங்கிலகிலத்தைத்தானோ? இருக்கலாம்!