பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/135

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

131



4. மரப் பெயர்த் தொகுதி

முருங்கைமரம் அறியாதவர்களும் பூவரசம், பூ பார்க்காதவர்களும் பெரிய நகரங்களில் இருப்பதாகச் சொல்வதுண்டு. இது கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால், ‘நெல் காய்க்கும் மரம் பார்த்திருக்கிறீர்களா?’ என்று சிலரை நோக்கிக் கேலி பண்ணுவது என்னவோ உண்மை! இது எதைக் காட்டுகிறது? மக்களுள் சிலர் மரஞ்செடி கொடிகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவராயுள்ளனர் என்பது இதனால் புலனாகும். அதிலும், மரஞ்செடிகள் அழிக்கப்பட்டு, அவை சூழ்ந்துள்ள சிற்றூர்கள் (கிராமங்கள்) புறக்கணிக்கப்படுகிற இந்தக் காலத்து மக்களுள் பெரும்பாலோர்க்கு ஒன்றுமே தெரியாது என்று துணிந்து கூறலாம்.

என்னென்ன மரஞ்செடிகொடிகள் எங்கெங்கே உள்ளன?—இங்கிங்கே உள்ள மரஞ்செடி கொடிகளுக்கு என்னென்ன பெயர்?— அவற்றின் கிழங்கு, வேர், பட்டை, தோல், பிசின், தளிர், இலை, காம்பு, ஈர்க்கு, மொட்டு, பூ, காய், கனி, கொட்டை, பயறு முதலியவற்றுள் ஒவ்வொன்றும் உடம்புக்கு என்னென்ன நன்மை தரும்?—எந்தெந்தப் பிணிக்கு எது எது நல்லது?— என்ற விவரங்கள் எல்லாம் நம் பழம் பாட்டன் பாட்டிமார்களுக்குத் தண்ணீர்ப் பாடம். நாமோ இப்பொழுது மருத்துவமனைகளைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறோம். இருந்த மரங்களைப் போக்கிவிட்டுப் புதிதாக மரம் நடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், திவாகரநிகண்டின்