பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/144

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

140



கடத்தற்குக் கடுமையான வழிக்கு அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம் என்று பெயர்களாம். பல வழிகள் பிரிந்து செல்லும் இடத்திற்குக் கவலை, கவர்நெறி என்று பெயர்களாம். விடங்கர் என்பது சிறிய வழியாம். பாதை பெருவழியாம். படுகர், மடு என்பன ஏறிஇறங்கும் வழிப்பெயர்களாம். அளக்கர் என்பது நீண்ட வழியாம். இவற்றை,

“அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம், அருநெறி.”

“கவலை, கவர் நெறி ஆகக் கருதுவர்.”

“விடங்கர் சிறுவழி ஆகும் என்ப.”

“பாதை பெருவழி.”

“படுகர், மடு இழிந்தேறப்படு நெறி.”

“அளக்கர் நீள் வழியே.”

என்னும் பாக்கள் உணர்த்தும். இவ்வளவு நுணுக்கமான பெயர்ச் செல்வங்களைப் பெற்றிருக்கும் தமிழ்மொழியின் சிறப்பே சிறப்பு! பொதுவாக மலையைக் குறிக்க முப்பத்தெட்டுப்பெயர்களும், கடலைக் குறிக்க முப்பத்தாறு பெயர்களும், வாவியைக் குறிக்க இருபத்தேழு பெயர்களும், சேற்றைக் குறிக்கப் பதினேழு பெயர்களும், ஊரைக் குறிக்க இருபத்தேழு பெயர்களும், மதிலைக் குறிக்கப் பத்தொன்பது பெயர்களும், வழியைக் குறிக்க இருபத்தொரு பெயர்களும் இப்படி இன்னும் பலவற்றிற்கும் பலப்பல பெயர்களும் உள்ளமை வியப்பிற்குரியதாம்.

இழிந்த சாக்கடை என்னும் சலதாரையைக் குறிக்க அங்கணம், தூம்புவாய் என்னும் இரண்டு அழகிய பெயர்களும், உயர்ந்த கல்வி நிலையத்தைக் குறிக்கக்