பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/155

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

151


பலர் அழைக்கின்றனர். இக்காலத்தும் சில விடங்களில் இதனை ‘விசி’ என்றும் ‘விசிப் பலகை’ என்றும் அழைக்கும் பழக்கம் மறையவில்லை. இதனைக் குறிக்க விசி, அரி என இருசொற்கள் இருப்பதாகத் திவாகரம் தெரிவிக்கிறது.

“விசி அரி ஆகும்”

என்பது பாடல். எனவே, பிற மொழிச் சொற்களிலேயே மயங்கிவிடாமல், பழந்தமிழ்ச் சொற்களைப் போற்றி வழங்கவேண்டும். இத் தொகுதியில் பல பொருள்கட்கும் உரிய பல பெயர்கள் கூறப்பட்டிருப்பினும், ஈண்டு மாதிரிக்காகக் கூறையைக் (துணியைக்) குறிக்கும் பெயர்களைமட்டும் காண்பாம்:–

[கூறையின் பெயர்]

“மடியே, புட்டம், மாறுகம், கலை, உடை,
இலக்கர், கலிங்கம், சேலை, காடகம்,
காழகம், அறுவை, வட்டம், சாடி,
தானே, வாத நம், கோடிகம், அம்பரம்,
ஆசாரம், ஆடை, தூசு, துகில், நீவி,
சமபடம், பட்டம், படாம், புடவை, கூறை.”

[நல்லாடையின் பெயர்]

“எடகம், புங்கம், பங்கம், இடையல்,
வேதகம், சில்லீகை, சித்திலீகை, கத்தியம்,
நாகம, தூரியம், கருள், பாரி, நல்லாடை.”

கலிங்கம், காழகம் என்னும் பெயர்களை நோக்குங்கால், அந்த நாடுகளிலிருந்தும் தமிழ் நாட்டுக்கு உடை வகைகள் வந்தன என்பது புலனாகும்.