பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/164

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

160



கணவன் மனைவியர்க்குள் ஏற்படும் சிறு மனத் தாங்கலுக்கு ‘ஊடல்’ என்று பெயராம். இந்த ஊடலைச் ‘செல்லக் கோபம்’ என்று சொல்லலாம். இது சிறிது முதிருமேயானால் அதற்குப் ‘புலவி’ என்று பெயராம். அந்தப் புலவி நீட்டிக்குமேயானால் அதற்குத் ‘துனி’ என்று பெயராம். இவ்வாறு நீட்டித்த ஊடல் ஒருவாறு முடிவடைந்து கூடலுக்கேற்ற சூழ்நிலை உருவாகுமானால் அதற்கு ‘ஒல்’ என்றும் ‘சிரல்’ என்றும் பெயர்களாம்.

“ஊடலின் முதிர்தல் புலவி யாகும்.”

“அதனின் நீடுதல் துனி எனப்படுமே.”

“ஒல்லும் சிரலும் முடிவிடன் உரைக்கும்.”

என்பன திவாகர நூற்பாக்களாம். அகராதி தொகுத்து வெளியிட்டுள்ள பலரும், ஈண்டு கூறப்பட்டுள்ள ஒல், சிரல் என்னும் சொற்களின் உண்மைப் பொருள் உணராதவராய், இச் சொற்களுக்கு ‘முடிவிடம்’ (Limit, End, Top) என்று பொருள் எழுதியுள்ளனர். ‘ஒல்லும் சிரலும் முடிவிடம் உரைக்கும்’ என்னும் பாடலை அவர்கள் திரிபாகப் புரிந்து கொண்டுள்ளனர் என உணரக்கிடக்கின்றது. ‘ஊடலின் முதிர்தல் புலவியாகும்,’ அதனின் நீடுதல் துனி எனப்படுமே என்னும் இரு பாடல்களோடு ஊடலைப் பற்றிய பகுதி முடிந்துவிட்டதாக அவர்கள் நம்பி, ‘ஒல்லும் சிரலும் முடிவிடன் உரைக்கும்’ என்னும் பாடலை, வேறு செயலைப் பற்றிக் கூறும் தனிப் பகுதியாகக் கொண்டுவிட்டனர். அதனால்தான், ‘ஊடல் முடியும் இடம்’ என்று பொருள் எழுதாமல், எது ஒன்றும் முடியக்கூடிய இடம் - எல்லை - உச்சி என்ற கருத்தில் பொதுவாக எழுதிவிட்டனர். இது பொருந்தாது. ‘ஒல்லும் சிரலும் முடிவிடன் உரைக்கும்’ என்னும் திவாகர