பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/166

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

162



“ஒல்லுவ சொல்லாது”

என்னும் பரிபாடல் (12) பகுதியாலும் விளங்கும் என்ற செய்தி அகராதி தொகுத்தவர்கள் அறிந்ததுதானே! ‘ஒல்’ என்னும் சொல்லுக்குரிய உடன்படுதல், பொருந்துதல், பொறுத்தல் என்னும் இம்மூன்று பொருள்களும், ‘ஒல்’ என்பதற்கு ‘ஊடல் முடிவிடம்’ என்று பொருள் கொள்வதற்குத் துணை புரியுமே! அதாவது ஊடல் கொண்ட தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் குறை பொறுத்து உடன்பாடு எய்திப் பொருந்துதல்தானே ஊடல் முடிவிடமாகும்?

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடி வாழ்க்கைத் துணைவர்களாகும் விழாவைக் கல்யாணம், விவாகம் முதலிய வடமொழிச் சொற்களால் இடைக்கால மக்கள் குறித்து வந்தனர். இக்காலத் தமிழ் மக்களோ, ‘திருமணம்’ என்னும் அழகிய தமிழ்ச் சொல்லால் அதனைக் குறிக்கின்றனர். ஆம்! மணத்தல் என்றால் கூடுதல். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடுகிற — இணைகிற நிகழ்ச்சிதானே திருமணம் என்பது! இதற்குத் திவாகரத்தில் அகச்சான்று காணலாம்.

“மணத்தல் கூடுதல்”

என்பது திவாகர நூற்பா. இப்படியாகத் துருவித் துருவி நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவேண்டும்.

ஊராண்மை என்றால் மிக்க செயலாம்; பேராண்மை என்றால் அரிய செயலாம்: