பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/168

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

164


“கணித்தலும், குணித்தலும் வரையறுத்த லாகும்.”

என்பது நூற்பா. இப்பாடலின் துணையால் கணிதத்தைப் பற்றிய ஓர் உண்மை புலனாகிறது. உலகில் இசை, இலக்கியம், ஓவியம், சிற்பம், நாடகம், கணிதம், விஞ்ஞானம், முதலிய பல கலைகள் உள்ளன; இவை பள்ளிக்கூடங்களிலும் மாணவர்க்குப் பயிற்றப்படுகின்றன. இவற்றுள், கணிதத்தைத் தவிர மற்ற கலைகளைப் பொறுத்தவரையில், காலப்போக்கில் பல மாறுதல்களும் புதுப்புது ஆராய்ச்சி முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக,—அன்று எழுதிய சில இலக்கியங்களை இன்று பலர் ஏற்றுக்கொள்வதில்லை, அன்று இசைத்த இசையும் நடித்த நாடகமும் இன்று பெரும்பாலோரைக் கவருவதில்லை. ஓவியத்திலும் ‘மாடர்ன் ஆர்ட்’ (Modern Art) என்ற பெயரில் பல மாறுதல்கள் காணப்படுகின்றன. நில நூலே எடுத்துக் கொண்டாலோ, உலகம் தட்டை என்று அன்று கூறினர்; உருண்டை என்று இன்று கூறுகின்றனர். கதிரவன் (சூரியன்) உலகத்தைச் சுற்றுவதாக அன்று கூறினர்; உலகம் கதிரவனைச் சுற்றுவதாக இன்று கூறுகின்றனர். விஞ்ஞான முடிவுகளோ காலத்துக்குக் காலம் மாறுகின்றன. புதுமை பெறுகின்றன பச்சையரிசியே உடம்புக்கு நல்லது என்று ஒரு நேரத்திலும் புழுங்கலரிசியே நல்லது என்று ஒரு நேரத்திலும், இன்னின்ன பொருட்டுக்களினால் (காரணங்களினால்) இந்தப் பொருள் தீயது என்று: ஒருவராலும், அதே பொருள் இன்னின்ன பொருட்டுக்களினால் நல்லது என்று ஒருவராலும் மாறிமாறிக் கூறப்படுகின்றன.

ஆனால் கணிதக் கலை மட்டும் ஒரே நிலையானது. அன்றும் நான்கும் மூன்றும் ஏழுதான் - இன்றும்