பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/170

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

166



அடுத்து, கூத்து (நடன-நாட்டிய) வகையைப் பற்றி அறிய வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

கூத்தின் பெயர்களாவன:–

“நடமே, நாடகம், கண்ணுள், நட்டம்,
படிகம், ஆடல், தாண்டவம், பரதம்,
ஆறுதல், தூங்கல், வாணி, குரவை,
இலயம், நிலயம், திருத்தம், கூத்தே;
நடனம், தூக்கு, நாட்டியம், நட்டணம்,
நடையும் அதற்கே நவிலலு மாகும்.”

“கரணம், பித்தம், மலைப்பு, பவுரி,
பிரமரி, வீரட் டானம், குனிப்பே,
உள்ளாளனம், கடகம், எனவே ஒன்பதும்
ஒள்ளிய கூத்தின் விகற்ப மாகும்.”

திருமால் ஆடும் கூத்தின் பெயர்களாவன:—

“அல்லியம், குடமாடல், மல்லே, மரக்கால்,
எல்லொளி மாயோன் ஆடலாகும்.”

சிவன் ஆடும் கூத்தின் பெயர்களாவன:–

“பாண்டரங்கம், கபாலம், கொடுகொட்டி,
என்றிவை மூன்றும் முக்கண னாடல்.”

முருகன் ஆடும் கூத்தின் பெயர்களாவன:—

“கொட்டியும், குடையும், குமரன் ஆடல்.”

திருமகள் ஆடும் கூத்து:–

“பரவை என்பது திருமகள் ஆடல்.”

துர்க்கை (காளி) ஆடும் கூத்து:-

“மரக்கால், கூத்தே, துர்க்கை ஆடல்.”