பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/178

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

174



(உதாரணம்) வரலாறாகவும் இருக்கலாம்—அல்லது—வாழ்க்கை நிகழ்ச்சியாகவும் இருக்கலாம். சிலப்பதிகாரம் போன்றவை வரலாற்று இலக்கியங்கள். திருக்குறள் போன்றவை வாழ்க்கை நிகழ்ச்சி இலக்கியங்கள்.

இப்போது தமிழ் மொழியில் எத்தனையோ பாவகைகளைக் காண்கின்றோம். ஆனால் பழங்காலத்தில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் வகைகளே முறையே முதன்மை பெற்றிருந்தன. இவற்றுள்ளும் வெண்பாவே முற்பட்டதும் முதன்மை உடையதும் ஆகும். இதனைத் தமிழ்மொழி வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் அறிந்தவர்கள் நன்குணர்வர். மேலும்,

“முதற்பா வெண்பா.”

என்னும் திவாகர நூற்பாவாலும் இக்கருத்து உறுதிபெறும். இதனால், பாக்களுள் குறள் வெண்பாவைத் தேர்ந்தெடுத்த திருவள்ளுவரது உயர்ச்சியும் திருக்குறளின் மாட்சியும் புலப்படுமே.

கணக்கு, கணக்காயர் என்னும் சொற்களைப் பற்றி முன் ஓரிடத்தில் நாம் ஆராய்ந்துள்ளோம். எண்ணாலான கணிதத்தை மட்டுமே இக்காலத்தில் கணக்கு என்னும் சொல்லால், மக்கள் குறிக்கின்றனர். அக்காலத்திலோ, எண்ணாலான கணிதம் எழுத்தாலான இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளையும் கணக்கு என்னும் சொல்லால் அழைத்தனர். நற்றிணை முதலிய பதினெட்டுச் சங்க இலக்கியங்களை ‘மேற்கணக்கு’ என்றும், நாலடியார் முதலிய பதினெட்டுச் சங்க இலக்கியங்களைக் ‘கீழ்க் கணக்கு’