பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/180

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

176



எழுத்து எழுத்தாகப் பிரித்து உணரமுடியாத ஓசையைக் குறிக்கும் பெயர்களாவன:—

“பிளிறலும், குளிரலும், பிரற்றலும், சிரற்றலும்,
மருளலும், பயிறலும், குரைத்தலும், கனைத்தலும்,
முளைத்தலும், அகவலும், எழுத்திலா ஓசை.”

பலவகையான ஒலிகள் கலந்த கலப்போசையைக் குறிக்கும் பெயர்களாவன:—

“தமரம், பூசல், ஆர்ப்பு, கர்ச்சனை,
குமுறல், உலம்பல், கோடணை, கோலா
கலமே, தெழித்தல், கலகம், ஆகுலமோடு,
ஊறுதல், முந்நான்கு ஒன்றலாப் பேரொலி.”

ஒலிக் குறிப்புக்களை அறிவிக்கும் பெயர்களாவன:—

“இம்மெனல், கல்லெனல், இழுமெனல், வல்லெனல்,
பொம்மெனல், ஒல்லெனல், பொள்ளெனல்,
ஞெள்ளெனல் அன்ன அநுகரண ஓசையாகும்;
கொம்மெனல், விடேலெனல், நெரேலெனல்,
முகேரெனல், அம்மெனல்,
சசேலெனல், அநுகரண ஓசை.”

உலக வழக்கில், சரேலெனப் பாய்ந்தான்; படீர் என உடைத்தான் என்றெல்லாம் சொல்லுகின்றோம் அல்லவா? இப்பாட்டில் கூறப்பட்டிருப்பவை யாவும் இவ்வினத்தைக் சேர்ந்தவையே.

இரட்டைக் கிளவிகளாக வரும் ஒலிப் பெயர்களாவன:—