பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/185

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

181



“அடுதல் சமைத்தலும், கோறலும் ஆகும்.”

என்பது நூற்பா. சமைத்தலுக்கும் கொல்லுதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்னும் குறிப்பு இந்த நூற்பாவால் புலனாகலாம். இதனைச் சிறிது ஆய்வாம் :

ஓர் உயிர் உணவு உண்கிறது என்றால் இன்னொன்றைக் கொன்றுவிட்டது என்றுதான் அதற்குப் பொருள். பெரும்பாலான அஃறிணை உயிர்கள் புலால் உண்ணிகளாகவே (மாமிச பட்சணகளாகவே) உள்ளன. அதாவது ஒன்றையொன்று கொன்றே. உண்ணுகின்றன. மரக்கறி உண்ணிகள் (சாகப் பட்சணிகள்) என்று அழைக்கப்படுகிற ஆடு மாடு. முதலியவை செடி கொடிகளை அப்படியே இழுத்துப் பிடுங்கி மெல்லுகின்றன. இஃதும் உயிர்க்கொலையே. மரஞ்செடி கொடிகளும் உயிர் உடையனவேயாம்.

மக்களையே எடுத்துக்கொள்வோமே. மிகப் பழங்காலத்தில் மக்கள் பிற உயிர்களைக் கொன்றே, தின்றார்கள் அண்மைக்காலம் வரையுங்கூட மக்களைக்கொன்று தின்னும் மக்களும் இருந்தனர். இன்றுங்கூட உலகில் புலால் புசிப்பவரே (Non-vegetarians) மிகப் பெரும்பான்மையர், மரக்கறி உணவினரோ (vegetarians) மிகச் சிறுபான்மையரே. ஒரு நாளைக்குக் கூட - ஒரு வேளைக்குக் கூட மரக்கறி மட்டும் உண்ண முடியாதவராய், நாடோறும் - வேளை தோறும் புலால் கலந்தே புசிப்பவர் இன்றும் பலர் உளர். மரக்கறி உணவிலுங்கூட உயிர்க் கொலை பரவலாக உள்ளது. நாம் எத்தனையோ நெற்களை ஒரு வேளை உணவாக உண்ணுகிறோம். அத்தனை நெற்களும் அத்தனை உயிர்கள். நாம் உண்ணும் அவரை, துவரை, உளுந்து.