பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/186

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

182



கடலை முதலிய பயறுவகைகள் அனைத்தும் உயிர்களே. திருவிழா நாட்களில் சுண்டல் செய்வதற்காக அண்டா நிறையக் கடலைகளைக் கொட்டி வேகவைக்கிறோமே — அப்போது உள்ளே கொதிக்கும் ஒலி கேட்கிறதே அது என்ன ஒலி தெரியுமா? ஐயையோ! எங்களை அடாத முறையில் கொல்கின்றீர்களே! என்று ஆயிரக்கணக்கான கடலைகள் அலறி ஓலமிடும் ஒலி தான் அது. நாம் உண்ணும் தானிய வகைகளும் பயறு வகைகளும், நிலத்தில் விதைத்தால் முளைத்துப் புதுவாழ்வு பெறக்கூடிய புத்துயிர்களே. நாம் புசிக்கும் காய்கனிகளிலுள்ள விதைகளும் கொட்டைகளுங்கூட அத்தகையனவே. ஆனால் எல்லாவற்றையும் நாம் உள்ளே தள்ளிச் செரிக்கச் செய்து விடுகிறோம்.

இதிலிருந்து, உணவு சமைத்தல் என்றால், உயிர்களைக் கொல்லுதல்—உயிர்களைக் கொன்று பதம் செய்தல் என்று பொருள் கொள்ள வழியிருக்கிறது. அந்தக் காலத்தில் புலாலையும் சரி—மரக்கறியையும் சரி மக்கள் பச்சையாகவே உண்டார்கள்; இந்தக் காலத்தில் நாம் வேக வைத்து உண்ணுகிறோம்—இதுதான் வேற்றுமை.

சமையல் வேலையின் தொடக்க நிகழ்ச்சி கொலைச் செயலே—அதாவது—ஆட்டையோ, கோழியையோ, மீனையோ, கூலங்களையோ (தானியங்களையோ) பயறுகளையோ கொல்லத் தொடங்கியபோதே சமையல் கலையும் தொடங்கிவிட்டது.

பண்டைக் காலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள்—கொல்லா நோன்பிகள், தாமாக உதிர்ந்த சருகுகளையும், தாமாக விழுந்த கனிகளின் (விதைகள்—