பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/190

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

186



“குழையே, குண்டலம், தளிர், சேறும் ஆகும்.”

“தோடே, தொகுதியும், பனையிதழ் போல்பவும்,
பூவின் இதழும் புகலும் கிளவி,"

என்னும் திவாகர நூற்பாக்களால் உணரலாம்.

இதிலிருந்து, இப்போது பெண்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்களின் மதிப்பு எத்தகையது: என்பதும் புலனாகலாம். அதாவது—உண்மையான பூக்களுக்குப் பதிலாக இப்போது பல வண்ணக் காகிதப் பூக்கள் நாட்டில் நிறைய நடமாடுகின்றன. இவை வாடா மலர்களாய் மக்களையும் இடங்களையும் ஒப்பனை செய்கின்றன. இருப்பினும் இவற்றிற்கு உண்மையான மலர்களின் மதிப்போ தகுதியோ இல்லையன்றோ ? உண்மையான ஓலை, குழை, தோடு இவற்றிற்குப் பதிலாக, பொன், வெள்ளி முதலியவற்றால் செய்த ஓலை, குழை, தோடு இவற்றிற்குள்ள மதிப்பும் காகிதப் பூக்களின் மதிப்புப் போன்றதே!

ஞமலி, ஞாலம் என்பனபோல் ஞகர வரிசையில் தொடங்கும் சொற்கள் மொழியில் மிகவும் குறைவே. அவ்வரிசையில் ‘ஞெ’ என்னும் எழுத்தில் தொடங்கும். ஞெள்ளல் என்னும் சொல்லுக்கு நிகண்டில் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளமை புதிய கவர்ச்சியளிக்கிறது. அது வருமாறு:

(ஆதியிற் பொருள் பகுதி)

“ஞெள்ளல், தெருவே, மேன்மையும், நிகழ்த்தும்."

(அந்தத்துப் பொருள் பகுதி)

“சோர்வு, மிகுதல், உடன்படல், படுகர்,
நாலினோடு ஒலியும், தெருவும், ஞெள்ளல்.”

என்பன நூற்பாக்கள்.