பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/201

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

197



கல்வியும் செல்வமும் இருவகைப் பொருள்களாம்:

“இருவகைப் பொருள் கல்விப் பொருள், செல்வப் பொருள்.”

இப்பாவில், கல்விப் பொருளுக்கு முதன்மை தரப்பட்டிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. கல்லாத, செல்வர்கள் இதனை உணரவேண்டும்.

“மெய், வாய், கண், மூக்கு, செவி, ஐம்பொறியே.”

என்னும் திவாகரப் பாடலில் உள்ளாங்கு ஐம்பொறிகள் தொன்றுதொட்டுப் பேசப்படுகின்றன. ஆனால், இக்காலத்து உளநூல் அறிஞர்கள் (Psychologist) உடல்தசையின் இயக்கத்தையும் ‘இயக்கப் பொறி’ (Kinaesthetic) என்னும் பெயரில் ஒரு பொறியாகக் கொண்டு பொறிகள் ஆறு என்கின்றனர். இது புதுமை!

நிகண்டினுள், தாய்மார்களை ஐந்து வகையினராக்கி

“பாராட்டுந் தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய்,
கைத்தாய், செவிலித்தாய், ஐந்தெனக் கழறுவர்.”

எனக் கூறியிருப்பது சுவையாயிருக்கிறது!

காலாட் படை, தேர்ப் படை, யானைப் படை, குதிரைப்படை எனப் படைகளை நால் வகையாகக் கூறுவதே அக்கால மரபு என்பதை அனைவரும் அறிவர். ஆனால், காலாட் படையை வேல் படை, வாள் படை, வில் படை என மூவகையாக்கி, தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை என்னும் மூன்றையும் சேர்த்து