பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/203

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

199



“கல்லும், உலோகமும், செங்கலும், மரமும்,
மண்ணும், சுதையும், தந்தமும், வண்ணமும்,
கண்ட சருக்கரையும், மெழுகும், என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பாவன.”

என்பது நூற்பா.

கல்=கருங்கல்; உலோகம்=பொன், வெள்ளி, வெண்கலம் முதலிய உலோகங்கள்; சுதை=சுண்ணாம்பு, வண்ணம்=பல்வகை வண்ணச் (நிறச்) சாந்து; கண்ட சருக்கரை=ஒரு வகைச் சருக்கரை.

இந்தப் பகுதி கலை உள்ளத்திற்கு ஓர் உணவாகும். உலகியலில் ‘பளிங்குச் சிலை’ என்கிறார்களே, இப்பாடலில் பளிங்கு கூறப்படவில்லையே எனின், மண் என்பதனுள் பளிங்கு அடங்கும். பளிங்கு—கண்ணாடி—பீங்கான் போன்றவை பல்வகை மண்ணால் ஆனவையேயன்றோ?

உலக மக்கள் அனைவரும் தொடர்பு கொண்டுள்ள இந்தக் காலத்தில் உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் (பாஷைகள்) இருப்பது தெரிய வருகிறது. உலகம் முழுவதும் தொடர்பு கொள்ளமுடியாத பழங்காலத்தில் பதினெட்டு மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன

“அங்கம், வங்கம், கலிங்கம், கெளசிகம்,
சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம்,
மகதம், கோசலம், மாடம், கொங்கணம்,
துளுவம், சாவகம், சீனம், காம்போஜம்,
பருணம், பப்பரம், எனப் பதினெண் பாடை.”

என்பது திவாகர நூற்பா. இப்பதினெட்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சுற்றுப்புற நாடுகளிலும்