பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/208

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

204



திவாகரம் கூறும் பதினெட்டு மொழிகளும் பிற்காலத்தில் பல்வேறு பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தன. சில தேய்ந்தன. சில குட்டி போட்டன. எனவே, பிற்காலத்தில் இந்தப் பதினெட்டு என்னும் எண் வரையறைக்கு இடமில்லாது போயிற்று. திவாகரத்தை அப்படியே அடியொற்றி (காப்பியடித்து) பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த சூடாமணி நிகண்டு, இந்தப் பதினெண் மொழிகளின் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. திவாகரத்துக்கும் சூடாமணிக்கும் இடைப்பட்ட எண்ணூறு ஆண்டுகளில் எத்தனையோ மொழிகள் கிளைத்துவிட்டனவாதலால், சூடாமணி நிகண்டு ‘கப்சிப்’ என்று பேசாமல் விட்டுவிட்டது.

பெயர்பெற்ற மொழிகள் என விதந்து பேசக்கூடிய அளவு எட்டாம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்த இப்பதினெட்டு மொழிகளுள் பலவற்றின் பெயர்களை அவ்வளவாக இன்று பார்க்க முடியவில்லை. இந்தியாவின் சிறந்த மொழிகளாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியி, வங்காளம், அசாம், காசுமீரி, பஞ்சாபி, குசராத்தி, மகாராட்டிரம், இந்தி, உருது, சம்சுகிருதம் என்னும் பதினான்கு மொழிகளே இப்போது திகழ்வது ஈண்டு எண்ணிப் பார்த்தற்குரியது.

அடுத்து, முப்பத்திரண்டு அறங்கள் (தருமங்கள்) இன்னின்னவை எனப் பின்வருமாறு திவாகரம் கூறுகிறது:

“ஆதுலர் சாலை, ஓதுவார்ககு உணவு, அறு
சமயத்தோர்க்கு உணவு, பசுவுக்கு வாயுறை,
சிறைச்சோறு, ஐயம், தின்பண்டம், மகச்சோறு,
மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால்,