பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

225

சொல்லுக்குப் பொருள் காணவேண்டுமானல் அந்தச் சொல்லைப் பிங்கலரது அமைப்புமுறையில் உடனே கண்டுபிடிக்க முடியாது. முதலிலிருந்து படித்துக் கொண்டு வந்தால்தான் அச்சொல் கிடைக்கும். எனவே, பிங்கலரது வைப்புமுறை வசதி இல்லாதது என்பது புலம்ை. .

இக்குறையைப் போக்க, பிற்காலத்தில் பிங்கல கிகண்டை அச்சிட்ட சிவன்பிள்ளை என்னும் அறிஞர், 109 சொற்களையும், அ-ஆ , க-கா என இக்கால அகராதி முறையில் அடுக்கிப் பதிப்பித்துள்ளார். சான்ருக, முதல் மூன்று பாக்களையும் இறுதியில் உள்ள மூன்று பாக்களையும் காண்பாம் :

- (அகப்பா) (1) புரிசையும் உள்ளுயர் நிலமும் அகப்பன.”

(அகம்)

(2) " மனமும் உள்ளும் மனையும் பாவமும்

புவியும் மாப்பொதுப் பெயரும் அகமே.”

  • . (அகலுள்)

(3) ஊரும் நாடும் அகலுள் ஆகும்.'

(வை) (108.9) " வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல்.

(வைகல்) (1090) “ தினமும் தங்கலும் தெரியின் வைகல்.”

(வையம்) -

(1091) உரோகிணி நாளும் பாரும் தேரும்

ஏறும் ஊர்தியும் வையம் எனப்படும்.”