225
225
சொல்லுக்குப் பொருள் காணவேண்டுமானல் அந்தச் சொல்லைப் பிங்கலரது அமைப்புமுறையில் உடனே கண்டுபிடிக்க முடியாது. முதலிலிருந்து படித்துக் கொண்டு வந்தால்தான் அச்சொல் கிடைக்கும். எனவே, பிங்கலரது வைப்புமுறை வசதி இல்லாதது என்பது புலம்ை. .
இக்குறையைப் போக்க, பிற்காலத்தில் பிங்கல கிகண்டை அச்சிட்ட சிவன்பிள்ளை என்னும் அறிஞர், 109 சொற்களையும், அ-ஆ , க-கா என இக்கால அகராதி முறையில் அடுக்கிப் பதிப்பித்துள்ளார். சான்ருக, முதல் மூன்று பாக்களையும் இறுதியில் உள்ள மூன்று பாக்களையும் காண்பாம் :
- (அகப்பா) (1) புரிசையும் உள்ளுயர் நிலமும் அகப்பன.”
(அகம்)
(2) " மனமும் உள்ளும் மனையும் பாவமும்
புவியும் மாப்பொதுப் பெயரும் அகமே.”
- . (அகலுள்)
(3) ஊரும் நாடும் அகலுள் ஆகும்.'
(வை) (108.9) " வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல்.
(வைகல்) (1090) “ தினமும் தங்கலும் தெரியின் வைகல்.”
(வையம்) -
(1091) உரோகிணி நாளும் பாரும் தேரும்
ஏறும் ஊர்தியும் வையம் எனப்படும்.”