228
228
காலறி வுயிர்) " உற்றறி புலன், நா, மூக்கொடு, கண்ணும்
பெற்ற வண்டு ஞெண்டு ஆதி தாலறிவின.”
ஐயறி வுயிர்) " உற்றறி புலன், நா, மூக்கொடு, கண், செவி
மக்களும் மாவும் ஐயறி வினவே.”
(ஆறறி வுயிர்) " மனளுேடு ஆறறி வினரே மக்கள்
ஒருசார் விலங்கும் அதுபெறற் குரித்தே.”
இவை ஆறும் பிங்கல நூற்பாக்களாகும். இந்த ஆறு பாடல்களைப் பொறுத்தமட்டும், எங்கோ ஒரு சொல் அல்லது ஒரிரு எழுத்து தவிர வேறு வேறுபாடு திவாகரத்திற்கும் பிங்கலத்திற்கும் இல்லையன்ருே?
பிங்கலத்தில் மேலும் பல விடங்களில், திவாகர நூற்பாக்களே அடிப்படையாக வைத்துக்கொண்டு, சில சொற்களையும் அடிகளையும் கூட்டியும் குறைத்தும் இடம் மாற்றியும் புதுக்கியும் நூற்பாக்கள் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
இதிலிருந்து, பொதுவாக முன்னுேர் மொழியைசிறப்பாகத் தந்தையின்மொழியைப் போற்றவேண்டும் என்னும் மரபைப் பிங்கலர் பின்பற்றி யுள்ளார் என்பது புலகுைம். அன்றியும், தந்தையின் சொத்தா கிய திவாகரத்தை, மைந்தகிைய பிங்கலர் எப்படியும் கையாளலாம் போலும் !