பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

257

பின்னர் அது பலரால் பதிப்பிக்கப்பட்டது. சில பதிப்புகள் வருமாறு :

(1) நூல் முழுதும் உரையுடன் (பன்னிரண்டாம் தொகுதிக்கு மட்டும் உரையில்லை.) யாழ்ப்பாணத்து கல்லூர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலப்பிள்ளை யால் பார்வையிடப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே பலமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளது. (இரண் டாம் பதிப்பு - கி. பி. 1898)

(2) நூல் முழுதும், மணிமங்கலம் வடிவேலு முதலியாரால் பார்வையிடப்பட்டு, மதுரை குருசாமி காயுடுவால் (கி. பி. 1901) பதிப்பிக்கப்பட்டுள்ளது.

(3) நூல் முழுதும் உரையுடன், பாரிப்பாக்கம் முனியப்ப முதலியாரால் பார்வையிடப்பட்டு அப்பாவு பிள்ளையால் (கி. பி. 1910) பதிப்பிக்கப்பட்டுள்ளது.

(4) நூல் முழுதும், கா. கதிரைவேற் பிள்ளை மாணவர் ப. கணேச முதலியார் செப்பனிட்ட உரை யுடன் (கி. பி. 1933) வெளிவந்துள்ளது.

(5) நூல் முழுதும் - யாழ்ப்பாணத்து கல்லூர் ஆறுமுக காவலரால் ஆராயப்பட்ட பதிப்பு - பலமுறை வெளிவந்துவிட்டது. 7-ஆம் பதிப்பு (கி. பி. 1957ஆம் ஆண்டில் வெளியாயிற்று.

(6) சூடாமணியின் பதினேராவது தொகுதி மட்டும் புதுவை - கயகப்ப முதலியார் உரையுடன் திரு. வேங்கடாசல முதலியாரது சென்னை சரசுவதி அச்சுக் கூடத்தில் (1836) பதிப்பிக்கப்பட்டுள்ளது.